Saturday, June 23, 2012

அத்தனையும் காதல் - 15 குட்டி கவிதைகள் ♥




தெளிந்த நன்
மழை நீரை
மட்டும்
அருந்தி வாழும்
அது
சாதகப் பறவை !
தேனினும் இனிய
உன்னை மட்டும்
எழுதும்
நான்
சாதகக் கவிஞன் !


 
ஒரே ஒரு நாள்
நம் தூக்கத்தை
கலைத்து
எழுப்பியது
காதல்...
இன்று
ஒவ்வொரு
இரவிலும்
அதைத்
தூங்கவிடாமல்
கையிலும்
தோளிலும்
நெஞ்சிலுமிட்டுக்
கொஞ்சிக்
கொண்டிருக்கிறோம் !
நன்றாக
நம்மிடம்
மாட்டிக்கொண்டது
காதல் !
 
உனக்கான
கவிதைகளாய்
என் எல்லா
நோட்டுகளிலும்
எழுதி வைத்தேன் ...
நான் விரும்பி
செய்த ஒரே
வீட்டுப்பாடம்
நீ மட்டும் தான்
அழகி !!



என் மௌனம்
உன் பெரும்
தேவை
என்கிற போது
என்அன்பின்
மொழிகள்
அனாதையாகிப்
போகிறதே
அதை நான்
என்ன செய்ய ?
ம்ம் ? என்ன செய்ய ?






எண்ணற்ற
உறவுகளுடன்
தொடங்கிய
வாழ்க்கையின்
எல்லை
எங்கிருந்தாலும்
பரவாயில்லை
அங்கு நீ
மட்டும் நில் !
உன் மடியில் என்
எல்லா
மூச்சையும்
முடித்துக் கொண்டு
காற்றோடு
காற்றாகிவிட்டால்
சந்தோஷம் !
 
மண்ணை
மழை
முத்தமிடுகையில்
எழும்
வாசத்தையும்,
உன்னை
நான்
முத்தமிடுகையில்
எழும்
வெட்கத்தையும்
ஒன்றாய்க்
கலந்து
ஓர் உணவு
செய்து
அதற்கு
அன்பெனப்
பெயரிட்டுத்
தின்று கொழுக்க
வேண்டும்....
உயிரெல்லாம்
நீயாகவும்
உணர்வெல்லாம்
மழையாகவும்
சில்லெனக்
குளிர வேண்டும் !


வரம்
கேட்கவில்லை,
நீயாய்
வந்தாய் .
சாபமும்
கேட்கவில்லை,
வந்த வழி
சென்றாய் .
விதியை
நொந்து
கொள்ள
விருப்பமில்லை.
உயிரும் உடலுமே
இங்கு நிலை
இல்லை !
இருப்பினும்
தூக்கிக் கொஞ்ச
ஆளில்லாமல்
தனித்துக் கிடக்கும்
அன்பை
நினைத்தால்
தான்
கத்தி அழத்
தோன்றுகிறது !
பாவம் !
ஒத்தையாய்
நிற்கிற
அத்தனை
அன்பும்
பாவம் .

 ●
ஒவ்வொரு
எழுத்தும்
உன்னை
எழுதிவிட்டு
எங்கேயோ
இருக்கிற
ஏதோஒரு
பெண்ணுக்காக
எழுதியதாக
நடிப்பது
நம் காதலுக்கு
நான்
வேறு வழியின்று
இட்டுக்
கொள்ளும் சூடு !

உன்னைப்
பிரதி எடுத்து
இடது கையில்
வைத்துக் கொண்டு
வலது கையில்
எல்லா
அழகையும்
தத்ரூபமாய்
வரைந்துவிட்டது
இயற்கை ...
சப்தமின்றி
பின்னால்
நின்று ரசித்த
வகையில் நான்
இயற்கையைவிட
இன்னும்
கொடுத்தவைத்த
காதலனாகிவிட்டேன் ! !
 
நீ
பார்த்த
நொடியிலேயே
பிடித்துப் போன
பொம்மையும்
பார்க்கப் பார்க்கப்
பிடித்துப் போன
நானும் என
ரெண்டு பெரும்
கொடுத்து
வைத்தவர்கள் !
உன் அணைப்பிலேயே
ஒவ்வொரு இரவும்
தூங்க !

 
வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

 
என் கவிதை
வீட்டில்,
எல்லாம் "நீ"யாய்
நிறைத்துப்
பூட்டிவிட்டு,
சாவியை
எங்கேயோ
தொலைத்து
விட்டதைப்
போலிருக்கிறது
இந்த இரவு !
 


எங்கேயோ
பாறைகளின்
இடுக்குகளில்
பூத்திருக்கும்
ஒற்றை மலரைப்
பார்த்து
வேதனைப்
படாமல்
இருக்க
முடிவதில்லை !
அது நீ இல்லாத
நானாகவே
தெரிகிறது !
 
 
உன் மத்தாப்புப்
பேச்சு
எல்லோருக்கும்
பெருவரம் .
எனக்கும் உன்
மௌனமும்
சேர்த்து !

Tuesday, June 12, 2012

இந்தப் பூக்கள் திருடுவதற்கல்ல ! - 11 குட்டிக் கவிதைகள் !



நேரடியாய்
கடவுளின்
தோட்டத்தில்
இருந்து நான்
ஆசைப்பட்டுத்
திருடிக் கொணர்ந்த
அன்பு மல்லிச்சரம்
நீ !



தேன்கூடு
நான் !
என்னை
இறுக்கமாகக்
கட்டிக்
கொண்டிருக்கிற
தேனீக்கள்
உன்
நினைவுகள் !



உன்னைப்
பார்த்துக்
கொண்டே
இருப்பது
மட்டும் தான்
என் நெஞ்சுக்குப்
பிடித்த ஒரே
இனிய தவம் !



என்னென்னவோ
எழுதும்
அறிவுப்புலமை
நிறைந்த
பெண்களின்
கவிதைகளை விட
என்னை
கிச்சுக் கிச்சு
மூட்டி சிரிக்க
வைக்கும் உன்
காமெடிக்
கவிதைகளே என்னை
அதிகம் ஈர்க்கிறது
அழகி :)



உன் சிரிப்பிற்கு
நான் காரணமாகும்
ஒவ்வொரு தருணமும்
கடவுள் - தான்
சேர்த்து வைத்திருக்கிற
வரப் பெட்டியிலிருந்து
ஒரு முத்தை
என் மனதிற்குள்
தவற விடுகிறான் !



அமைதியான
சப்தங்கள்
கைகோர்த்துக்
கொண்டு
பேசுகிற
பேரழகான
கவிதை
உன் மூச்சு !



எந்த
மொழியும்
செம்மொழிதான் ,
உன்னைப் போல்
ஒரு பேரெழில்
பெருங்கவிதையைப்
பெற்றெடுத்தால்
♥ 


அன்பிற்குத்
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே !
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..

கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !

நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !

 
என் உள்ளே போகிற
மூச்சும் சரி ,
வெளியில் அனுப்பப்படுகிற
மூச்சும் சரி
எல்லா மூச்சின் முகப்பிலும்
உன் பெயரையே
முகவரியிட்டு
அனுப்புகிறேன் ! 
    


பூக்களின் இதழ்களைத் 
தொட்டுப் பார்க்கையில் 
எங்கிருந்து தான் 
ஆர்ப்பரித்து வருமோ 
உன் வாசம்... 
என்னை ஒட்டுமொத்தமாய் 
சுற்றிச் சூழ்ந்த 
கட்டித் தழுவிக் 
கொள்கிறது அழகி !