Thursday, April 5, 2012

இப்படி இருந்திருக்கலாம்....

கண்காணா 
தூர தேசத்தில்

ஆளரவமில்லாத 
அடர்க்காட்டில்

விண்ணின்று 
கொட்டும்
அருவியின்  
வழியில்
  
பாறையில் 
பட்டுத் தெறித்த 
கொஞ்சம் 
நீர்த்துளியால்

உயிர்பெற்று 
வளர்ந்த 
பூக்களின்  
இதழ்களுக்குள்  

ஒளிந்து 
கொண்டிருக்கும் 
ரெட்டைத் 
தேனீக்களாய் 
நாம் 
பிறந்திருக்கலாம்....!!

நம் மதம் 
புன்னகையாகவும்

நம் சாதி
ஈக்களாகவும்

நம் சொந்தங்கள்
பூக்களாகவும் 
இருந்திருப்பார்கள் !

நாமும் யார் 
எதிர்ப்பும் இன்றி 
சேர்ந்தே
வாழ்ந்திருந்திருக்கலாம்!  
  

Sunday, April 1, 2012

போறேன் போ.. வேண்டாம் போகாத !

"வேண்டாம் போகாத"
என்று சொல்வேன்
என்கிற கற்பனையில் 
"போறேன் போ"  
என்று சினந்து 
போய் ஒளிந்துகொள்கிறாய்...
ரொம்ப நேரம் ஆகியும் 
"எங்க போன "
என்று கேட்காமலேயே 
இருக்கிறேன் நான் !
திரும்ப வந்துநீ 
சட்டையைப் பிடித்து
கன்னத்தில் அறைந்தென் 
நெஞ்சோடு முகம்  
  புதைத்துக் கொண்டு
"போடா நாயே பேயே
பண்ணி லூசு "  
என்று உதிர்க்கும் 
கவிதைகளைக் 
கேட்டு மகிழத்தான் 
அத்தனை 
திருட்டு மௌனம் 
காத்தேன் என்பது 
நீ புரிந்து கொள்ளாத 
உண்மை அழகி !