Sunday, October 31, 2010

வழக்கம் போல இதற்கும் தலைப்பு -அன்பு




யுகங்கள் தோன்றி மறையும் !


நாகரிகம் வளர்ந்து சுறுங்கும் !


மனிதர்கள் பிறந்து மடிவர் ! 

'முரண்பாடு' என்னும்
முதலிலேயே எழுதி 
வைக்கப்பட்ட விதியில் 

நீயும் நானும் 
ஒருபொருள் சுமந்த இரு வரி அழகி !
அவ்வளவுதான்!

நாம் ....

பிறந்தோம் வாழ்ந்தோம்,  
வாழ்ந்துவிட்டு மறைவோம்! 

இடையில்...?

இருவரும் சேர்ந்து விதியில்
ஒரு வரி மட்டும்  எழுதினோம்! -
அதுதான் காதல்  

நம் இருவரின் காதலும் 
சேர்ந்து ஒரு கவிதை எழுதியது - 
அது அன்பு !

இப்படி ,
நிலையில்லா மனிதவாழ்வில் 
என் நித்தியமெல்லாம்
உன் அன்பிற்காக மட்டும் வாழ்வது 
எத்தனை பெரிய வரம் அழகி !


முத்தம் அன்பே சொல்லும் !


உன்னை முத்தமிட்டதாய் 
கவிதை எழுதுகிறேன் ,

கவிதையில் பொய் எழுதுவதை 
அப்போது மட்டும் 
நிறுத்தி வைக்கிறேன் .!

என் பொய்களை  ரசிக்கிற உலகம் 
ஏனோ உண்மையை படித்து 
முகம்  சுழிக்கிறது !

அப்போது தான் நினைத்தேன் :
பேசாமல் நமக்கு வயசு 
ஏழாகவோ , இல்லை எழுபதாகவோ  
இருந்திருக்கலாம் ! 

நம் முத்தத்தின் ஈரத்தில் கசிகிற 
அன்பை மட்டும் உலகம் கவனித்திருக்கும் ! 

சரி விடடி., 
முத்தத்திற்கு அர்த்தம் - " அன்பு " என்று சொல்பவனுக்கு 
மட்டும் நம் காதல் கண்டிப்பாய் புரியும் அழகி ...!

L o v e y o u  s o m u c h d i !


விலை : ஒரு பெருமூச்சு


அழகி !
மௌனங்கள் நூறுநொடி ,
வார்த்தைகள் ஆயிரம் கோடி ,
எண்ணங்களும் நினைவுகளும் ,
எண்ணற்ற என்னினைப்பும் ,
எனக்காக நீ கொடுக்கும் 
வரங்களும் சாபங்களும் !
என் பெருமூச்சை 
விலைவாங்கிக் கொள்கிறதடி !