Sunday, February 7, 2010

விரல்களின் வார்த்தைகள்

             
             மாதக்கணக்கில் பிரிந்திருந்து மறுபடி சந்திக்கும் போது

            ஓடி வந்து அமர்ந்து கொள்கிறாய் -உனக்கான என்னருகில்...

            நமக்கு முன்பே நம் பிரிவின் வலியை ஆற்றிக்கொள்கிறது

            வார்த்தைக்கு முன்பே வருடத்தொடங்கும் நம் விரல்கள்!!

எனக்காகவே அழப் பிறந்தவள்

                      என்னை ஒருநாள் பிரிந்ததர்க்கே இப்படி அழுது தீர்க்கிறாயே அழகி ..!!


                                           எனக்கு இரு வருடங்களுக்கு முன்பே பிறந்தாயே .,


                                  அப்போதும் இப்படித்தான் நானில்லாமல் அழுதாயோ .!!??